கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா என்ற வைரஸ் தற்போது உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. வல்லரசு என்று மார்தட்டி கொள்ளும் நாடுகள் கூட கொரோனா அச்சத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,627ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 139ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் மட்டும் 3,169 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,796ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் சீனாவில் தற்போது பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.